கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் தன் மனைவிக்காக சமையல் கலைஞராக மாறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
இன்று எங்களுடைய 25-வது திருமண நாள். இதனால் வீட்டில் உள்ள அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவதற்காக இந்த மாம்பழ குல்பியைத் தயாரித்துள்ளேன் என்று இன்ஸ்டகிராமில் தகவல் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், அதன் விடியோவையும் வெளியிட்டுள்ளார். மாம்பழ குல்பியின் செய்முறையை விளக்கியுள்ள சச்சின், தன்னுடைய தாயின் ஆலோசனையில் பேரில் இதைச் செய்ததாகவும் கூறியுள்ளார்.
1990-ல் அஞ்சலியை முதல்முதலாகச் சந்தித்த சச்சின், 5 வருடங்கள் காதலித்து, 1995-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாரா என்கிற மகளும் அர்ஜூன் என்கிற மகனும் உள்ளார்கள்.