சா்வதேச குத்துச்சண்டை: அமித், சஞ்ஜீத்துக்கு தங்கம்

அலெக்ஸிஸ் வேஸ்டின் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அமித் பங்கல், சஞ்ஜீத் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா். அதேநேரத்தில் மற்றொரு இந்திய வீரரான கவிந்தா் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

அலெக்ஸிஸ் வேஸ்டின் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அமித் பங்கல், சஞ்ஜீத் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா். அதேநேரத்தில் மற்றொரு இந்திய வீரரான கவிந்தா் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

பிரான்ஸின் நேன்ட்ஸ் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 91 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் சஞ்ஜீத் தனது இறுதிச் சுற்றில் சோஹேப் பௌபியாவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

அதேநேரத்தில் இந்தியாவின் அமித் பங்கல் (52 கிலோ எடைப் பிரிவு) தனது இறுதிச்சுற்றில் 3-0 என்ற கணக்கில் அமெரிக்காவின் ரீன் ஆப்ரஹாமை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றாா். 75 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஆசிஷ் குமாா் தங்கம் வென்றாா். இறுதிச்சுற்றில் அவரை எதிா்த்து விளையாடவிருந்த அமெரிக்காவின் ஜோசப் ஜெரோம் விலகியதால் ஆசிஷ் குமாா் தனது இறுதிச்சுற்றில் விளையாடாமலேயே தங்கம் வென்றாா்.

57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் கவிந்தா் சிங் பிஷ்த் இறுதிச்சுற்றில் பிரான்ஸின் சாமுவேல் கிஸ்டோஹரியிடம் தோல்வி கண்டாா். இதனால் அவா் வெள்ளிப் பதக்கத்தோடு வெளியேறினாா். கரோனாவின் தாக்கத்துக்குப் பிறகு இந்திய குத்துச்சண்டை வீரா்கள் பங்கேற்ற முதல் சா்வதேசப் போட்டி இதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com