பிரபல கால்பந்து வீரர் மரடோனா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்ஜெண்டீனாவில் உள்ள லா பிளேடாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் கரோனா தொற்று பாதிப்பும் இல்லை என்றும் கோல் டாட் காம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் மரடோனாவுக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மரடோனா, நான்கு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1986-ல் மரடோனா தலைமையிலான ஆர்ஜெண்டீனா அணி உலகக்கோப்பையை வென்றது. அப்போட்டியின் சிறந்த வீரராகவும் தேர்வானார். ஆர்ஜெண்டீனா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடி 34 கோல்களை அடித்துள்ளார்.