லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெறும் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் குரூப்சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் வெற்றி கண்டார்.
உலகின் 4-ஆம் நிலை வீரராக உள்ள மெத்வதேவ் தனது முதல் சுற்றில் உலகின் 7-ஆம் நிலையில் உள்ள ஜெர்மனியின் அலெக்ஸôண்டர் ஸ்வெரேவை சந்தித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மெத்வதேவ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் அவர் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டின்போது மெத்வதேவ் வித்தியாசமாக மேற்கொண்ட ஒரு சர்வ் அவரது முன்னிலையை மேலும் அதிகரித்தது.
வெற்றிக்குப் பிறகு மெத்வதேவ் பேசியதாவது:
எதிர்பார்த்ததைப் போல என்னால் சிறப்பாக சர்வ் செய்ய இயலவில்லை. ஸ்வெரேவ் எனது சர்வ்களை சிறப்பாக எதிர்கொண்டார். அந்த நிலையில் முதல் செட்டில் ஸ்வெரேவ் பேஸ்லைனில் இருந்து 5 மீட்டர்கள் தள்ளி நின்றதைக் கண்டேன்.
அப்போது சற்று சமயோசிதமாக செயல்பட்டு கைக்கு கீழாக சர்வ் செய்தேன். அதற்கு பலன் கிடைத்தது என்று மெத்வதேவ் கூறினார்.
நடால்
தோல்விமற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை எதிர்கொண்ட ஸ்பெயினின் ரஃபேல் நடால், அவரிடம் போராடி வீழ்ந்தார்.
உலகின் 2-ஆம் நிலை வீரரான நடாலை 7-6 (9/7), 7-6 (7/4) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் உலகின் 3-ஆம் நிலை வீரரான தீம். இதனால் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில் முதல் கோப்பையை வெல்லும் நடாலின் கனவு கனவாகவே நீடிக்கும் நிலைக்குச் சென்றது.