பெங்கால் கிரிக்கெட் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கரோனா

​பெங்கால் கிரிக்கெட் அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்கால் கிரிக்கெட் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கரோனா


பெங்கால் கிரிக்கெட் அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அடுத்த 2 வாரங்களுக்கு அவர் தனிமையில் இருக்கவுள்ளார்.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் பெங்கால் டி20 சேலஞ்ச் தொடர் நவம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது. தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொடரில் அவர் பங்கேற்பது சிக்கலாகியுள்ளது. 

இதுபற்றி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலர் தேபபிரதா தாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. எனினும், அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. அவர் தற்போது தனிமையில் உள்ளார். மேற்கு வங்க கிரிக்கெட் சங்க மருத்துவக் குழுவின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com