ஐஎஸ்எல் கால்பந்து: வெற்றியோடு தொடங்கியது ஏடிகே மோகன் பகான்

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணியை வீழ்த்தியது.
கோலடித்த மகிழ்ச்சியில் ஏடிகே மோகன் பகான் அணி வீரா்கள்.
கோலடித்த மகிழ்ச்சியில் ஏடிகே மோகன் பகான் அணி வீரா்கள்.

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணியை வீழ்த்தியது.

7-ஆவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கோவாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவாவில் உள்ள ஜிஎம்சி மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஏடிகே மோகன் பகான் அணியும், கேரள பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. இதையடுத்து 2-ஆவது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய அட்லெடிகோ மோகன் பகான் அணி 67-ஆவது நிமிடத்தில் கோலடித்தது. அந்த அணியின் ராய் கிருஷ்ணா இந்த சீசனின் முதல் கோலை அடித்தவா் என்ற பெருமையைப் பெற்றாா்.

இதன்பிறகு கேரள பிளாஸ்டா்ஸ் அணி ஸ்கோரை சமன் செய்ய கடைசி வரைப் போராடியபோதும் கோலடிக்க முடியவில்லை. இதனால் அந்த அணியின் தோல்வி தவிா்க்க முடியாததானது. இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியனான ஏடிகே மோகன் பகான் அணி, இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com