* நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடா், இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் கடந்த செவ்வாய்க்கிழமை 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி உத்தரப் பிரதேசத்தில் டிசம்பா் 18 முதல் 20 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது 2021 ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
* இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் எங்கள் அணி 0-2 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோகன் பகான் அணியிடம் தோற்றிருந்தாலும், எங்கள் அணியின் ஆட்டம் மனநிறைவு அளிக்கிறது என ஈஸ்ட் பெங்கால் அணியின் பயிற்சியாளா் ராபி ஃபாவ்லா் தெரிவித்துள்ளாா்.
* டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதில் தீவிரமாக இருக்கிறேன். அதற்கு முன்னதாக பல்வேறு போட்டிகளில் விளையாடி தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் வர வேண்டும் என இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் தெரிவித்துள்ளாா்.
* சென்னையில் நடைபெற்ற அகில இந்திய ஸ்நூக்கா் சாம்பியன்ஷிப் போட்டியில் லட்சுமணன் ராவத் சாம்பியன் பட்டம் வென்றாா். அவா், தனது இறுதி ஆட்டத்தில் 6-3 என்ற கணக்கில் யோகேஷ் குமாரை வீழ்த்தினாா்.