டென்மார்க் ஓபன்: ஸ்ரீகாந்துக்கு முதல் வெற்றி

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 
டென்மார்க் ஓபன்: ஸ்ரீகாந்துக்கு முதல் வெற்றி


ஒடென்ஸ்: டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 
போட்டித்தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் இங்கிலாந்தின் டோபி பென்டியை எதிர்கொண்டார். ஆட்டத்தை 37 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டுவந்த ஸ்ரீகாந்த் 21-12, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். 
வெற்றிக்குப் பிறகு ஸ்ரீகாந்த் கூறுகையில், "நீண்ட நாள்களுக்குப் பிறகு விளையாடுவது, சாகசம் செய்வதுபோல் உள்ளது. 
இதுவரை, போட்டிகளில் இருந்து இவ்வளவு நாள்கள் விலகியிருந்ததில்லை. இந்த ஆட்டத்தை நான் நல்ல முறையில் தொடங்கினாலும், 2-ஆவது செட்டில் டோபி சற்று சவால் அளித்தார்' என்றார். 
இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்த இதர 2 இந்தியர்களான அஜய் ஜெயராம் மற்றும் சுபாங்கர் டே ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினர். இவர்களில் அஜய் ஜெயராம் 12-21, 14-21 என்ற செட்களில் உலகின் 3-ஆம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்சென்னிடம் வீழ்ந்தார். சுபாங்கர் டேவை 21-13, 21-8 என்ற செட்களில் கனடாவின் ஜேசன் ஆண்டனி ஹோ ஷு வீழ்த்தினார். 
இந்த ஜேசன் ஆண்டனியை தனது 2-ஆவது சுற்றில் சந்திக்கிறார் ஸ்ரீகாந்த். இந்தப் போட்டியில் ஏற்கெனவே லக்ஷயா சென் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com