ஒருநாள் ஆட்டம்: 281 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி!

3 ஒருநாள், 3 டி20 தொடர்களில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானுக்கு வந்துள்ளது.
படம்: ஐசிசி
படம்: ஐசிசி


ஜிம்பாப்வேவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது.

3 ஒருநாள், 3 டி20 தொடர்களில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. ராவல்பிண்டியில் ஒருநாள் தொடர் அக். 30, நவம்பர் 1, 3 தேதிகளில் நடைபெறுகிறது. நவம்பர் 7, 8, 10 தேதிகளில் லாகூரில் டி20 தொடர் நடைபெறும்.

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரிஸ் சோஹைல் 71, இமாம் உல் ஹக் 58 ரன்கள் எடுத்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com