சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்த தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், 'நாங்கள் வேட்டைக்குத் தயார்' என்று ட்வீட் செய்துள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்த மிட்செல் சான்டனர் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) துபையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்தனர்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் தாஹிர் பதிவிட்டுள்ளதாவது:
"என் இனிய தமிழ் மக்களே தஞ்சமடைந்தேன் அன்பு இல்லத்தில் (துபை). போட்டிகள் துவங்க ஒரு வாரம் இருக்கும் இந்த தருவாயில் நாங்கள் (சென்னை சூப்பர் கிங்ஸ்) வேட்டைக்குத் தயார். நீங்கள் ஆட்டத்தைக் காண தயாரா?" என்று பதிவிட்டுள்ளார்.
இத்துடன் எடுடா 'வண்டிய, போடுடா விசில' என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.