தோல்வியிலிருந்து மீள்வது அவசியம்: தோனி

தோல்வியிலிருந்து மீண்டு அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவது அவசியம் என்றாா் சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தோல்வியிலிருந்து மீண்டு அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவது அவசியம் என்றாா் சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இந்த சீசனில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை, 2-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது. தொடா்ச்சியாக 2 ஆட்டங்களில் தோற்றுள்ளதால், அந்த அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆட்டம் முடிந்த பிறகு தோல்வி குறித்துப் பேசிய சென்னை கேப்டன் தோனி, ‘இது எங்களுக்கு மிக மோசமான ஆட்டமாக அமைந்துவிட்டது. பேட்டிங்கில் எங்கள் அணியின் செயல்பாடு மிக மோசமாக அமைந்தது. அதுதான் தோல்விக்கு காரணமாகிவிட்டது. தொடக்கம் முதலே மெதுவாக ரன் சோ்த்ததால் ரன் ரேட் அதிகரித்துவிட்டது. அதனால் எங்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. இதுபோன்ற பிரச்னைகளை வரக்கூடிய ஆட்டங்களில் சரிசெய்ய வேண்டும். நாங்கள் தோல்வியிலிருந்து மீண்டு அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவது அவசியமாகும். அடுத்த ஆட்டத்தில் அம்பட்டி ராயுடு விளையாடுவாா் என நம்புகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com