ஆர்சிபி அணியைச் சேர்ந்த பிரபல வீரருக்கு கரோனா பாதிப்பு

ஆர்சிபி அணியைச் சேர்ந்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்சிபி அணியைச் சேர்ந்த பிரபல வீரருக்கு கரோனா பாதிப்பு

ஆர்சிபி அணியைச் சேர்ந்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. கரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது. 

ஏப்ரல் 9 அன்று சென்னையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் மும்பையும் பெங்களூரும் மோதுகின்றன. அடுத்த நாள், மும்பையில் சென்னையும் தில்லியும் மோதுகின்றன. மும்பையில் 10 ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் ஆர்சிபி இளம் வீரர் தேவ்தத் படிக்கல், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 20 வயது படிக்கல் இதன் காரணமாகத் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அடுத்த பரிசோதனையில் கரோனா இல்லை என உறுதியான பிறகு அணியினருடன் அவர் மீண்டும் இணைந்துவிடுவார். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் படிக்கல்லால் முதல் ஆட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்த வருடம் ஐபிஎல் போட்டிக்கு அறிமுகமான படிக்கல், 473 ரன்கள் எடுத்து ஆச்சர்யப்படுத்தினார். சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டால் அலி கோப்பை டி20 போட்டியில் 6 ஆட்டங்களில் 218 ரன்கள் எடுத்தார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் கரோனாவால் பாதிக்கப்படும் 3-வது வீரர் படிக்கல். இதற்கு முன்பு அக்‌ஷர் படேல், நிதிஷ் ராணா ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com