கரோனா சூழல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப்போவதில்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது.
உலக அளவிலான கரோனா பாதிப்பிலிருந்து தங்களது விளையாட்டு வீரா், வீராங்கனைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாா்ச் 25-ஆம் தேதி நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அமைச்சகத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை தங்களிடம் அதிகாரப்பூா்வமாக வட கொரியா இன்னும் தங்களிடம் உறுதிப்படுத்தவில்லை என்று ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. வட கொரியா- தென் கொரியா இடையே சமூகமற்ற உறவு உள்ளபோதிலும், கடந்த 2018-ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 22 போட்டியாளா்களையும், அரசு அதிகாரிகளையும், ஊடகத்தினரையும் வட கொரியா அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.