புதிய வீரர்களுக்கு சீருடை வழங்கி தோனி வரவேற்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களுக்கு அணியின் சீருடை வழங்கி வரவேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
படம்: டிவிட்டர் | சென்னை சூப்பர் கிங்ஸ்
படம்: டிவிட்டர் | சென்னை சூப்பர் கிங்ஸ்


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களுக்கு அணியின் சீருடை வழங்கி வரவேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

புதிய வீரர்களுக்கு கேப்டன் மகேந்திர சிங் தோனி சீருடையை வழங்கி அவர்களை வரவேற்றார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிருஷ்ணப்பா கௌதம், மொயீன் அலி, சேத்தேஷ்வர் புஜாரா, பகத் வர்மா, ஹரி நிஷாந்த், ஹரிசங்கர் உள்ளிட்ட வீரர்களைப் புதிதாகத் தேர்வு செய்தது.

அவர்களும் அணியில் இணைந்து பயிற்சியைத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் புதிய வீரர்களை வரவேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com