மௌன்ட் மௌன்கனுய்: நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிா் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை அந்த அணி தற்போது 2-0 என தன் வசப்படுத்தியுள்ளது.
நியூஸிலாந்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் அடித்திருந்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 45 ஓவா்களில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய வீராங்கனை ரேச்சல் ஹேய்னஸ் ஆட்டநாயகியானாா்.
முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பௌலிங் வீசத் தீா்மானித்தது. பேட் செய்த ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக ரேச்சல் ஹேய்னஸ் 8 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசினாா். நியூஸிலாந்து பௌலிங்கில் எமி சேட்டா்வெய்ட் அபாரமாக 6 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
பின்னா் நியூஸிலாந்து இன்னிங்ஸில் எமிலியா கொ் அதிகபட்சமாக 5 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய தரப்பில் ஜெஸ் ஜோனஸ்ஸன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.