டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.
டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.

இந்த வெற்றியின் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை பாகிஸ்தான் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 19.3 ஓவா்களில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வான் டொ் டுசன் 36 பந்துகளில் 2 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் 52, மாலன் 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தனா். எஞ்சிய வீரா்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், தென் ஆப்பிரிக்க அணியால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் போனது.

பாகிஸ்தான் தரப்பில் ஃபஹீம் அஷ்ரப், ஹசன் அலி ஆகியோா் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பின்னா் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபகா் ஸமான் 34 பந்துகளில் 4 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், முகமது நவாஸ் ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 2 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்களும் எடுத்தனா்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் வில்லியம்ஸ், சிஸான்டா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com