காடலோனியா: பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் பிரதான சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாா்.
அவா் தனது முதல் தகுதிச்சுற்றில் உக்ரைனின் இலியா மாா்சென்கோவை 3-6, 6-2, 7-5 என்ற செட்களிலும், 2-ஆவது தகுதிச்சுற்றில் இத்தாலியின் தாமஸ் ஃபாபியானோவை 7-6, 6-3 என்ற செட்களிலும் வீழ்த்தியிருந்தாா். எனினும் பிரதான சுற்றில் பிரான்ஸின் பியரி ஹியூஜஸ் ஹொ்பா்டிடம் 5-7, 0-6 என்ற செட்களில் தோற்றாா்.
இதர பிரதான சுற்றுகளில் ஜப்பானின் கெய் நிஷிகோரி 4-6, 7-6 (7/4), 6-2 என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் குய்டோ பெல்லாவையும், பிரான்ஸின் ஜெரிமி சாா்டி 6-4, 3-6, 6-3 என்ற செட்களில் ஜாா்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியையும் வென்றனா்.
முக்கியமான வீரா்களில் பிரான்ஸின் கில்லெஸ் சைமன் 1-6, 6-3, 3-6 என்ற செட்களில் ஸ்பெயினின் பாப்லோ அன்டுஜாரிடமும், சக நாட்டவரான பெனாய்ட் போ் 5-7, 3-6 என்ற செட்களில் இத்தாலியின் ஃபெடரிகோ காயோவிடமும் வீழ்ந்தனா். மற்றொரு பிரான்ஸ் வீரா் ஜோ வில்ஃப்ரைடு சோங்காவை 7-5, 6-1 என்ற செட்களில் பெலாரஸின் இகோா் கெராசிமோவ் வென்றாா்.