ராகுல், கெயில் அதிரடி ஆட்டம்: பெங்களூர் அணிக்கு 180 ரன்கள் இலக்கு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 179 ரன்கள் குவித்தது.
ராகுல், கெயில் அதிரடி ஆட்டம்: பெங்களூர் அணிக்கு 180 ரன்கள் இலக்கு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 179 ரன்கள் குவித்தது.

14-வது ஐபிஎல் சீசனின் 26-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராத் கோலி முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கே .எல்.ராகுல் - பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் பிரப்சிம்ரன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிறிஸ் கெயில், ராகுலுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற கேப்டன் ராகுல் மட்டும் தனிஒருவனாக களத்தில் நின்று போராடினார். சிறப்பாக விளையாடிய அவர் 57 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com