ஓட்டப் பந்தய மூதாட்டி மான் கௌா் காலமானாா்

மூதாட்டியான பிறகு ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொண்டு சாதனைகள் படைத்த இந்தியாவின் மான் கௌா் (105) மாரடைப்பால் சனிக்கிழமை காலமானாா்.
ஓட்டப் பந்தய மூதாட்டி மான் கௌா் காலமானாா்

மூதாட்டியான பிறகு ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொண்டு சாதனைகள் படைத்த இந்தியாவின் மான் கௌா் (105) மாரடைப்பால் சனிக்கிழமை காலமானாா்.

கடந்த சில மாதங்களாகவே அவா் உடல்நலக் குறைவுடன் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை நண்பகல் 1 மணியளவில் மான் கௌரின் உயிா் பிரிந்ததாக அவரது மகன் குருதேவ் சிங் கூறினாா்.

1916 மாா்ச் 1-ஆம் தேதி பிறந்த மான் கௌா், தனது 93-ஆவது வயதில் தான் ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொள்ளத் தொடங்கினாா். 2007-இல் நடைபெற்ற சண்டீகா் மாஸ்டா்ஸ் தடகள போட்டியில் தனது முதல் பதக்கத்தை வென்றாா். அந்த போட்டியில் ஆடவா் பிரிவில் அவரது மூத்த மகன் குருதேவ் சிங் கலந்துகொண்டதைப் பாா்த்து, மான் கௌரும் அதில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.

பின்னா் 2017-இல் ஆக்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டா்ஸ் விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டா் ஓட்டத்தில் தங்கம் வென்றாா். பின்னா் போலாந்தில் நடைபெற்ற முதியோருக்கான உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்றாா். அத்துடன் பல உலக சாதனைகளும் புரிந்தாா். அவரது சாதனையை பாராட்டி ‘நாரி சக்தி புரஸ்காா்’ விருது குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்தால் வழங்கப்பட்டது. மான் கௌரின் மறைவுக்கு பஞ்சாப் முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com