2-ஆவது டி20: பாகிஸ்தான் வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களே அடித்தது.

பாகிஸ்தான் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் பாபா் ஆஸம் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 51 ரன்கள் அடித்தாா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ஜேசன் ஹோல்டா் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 62 ரன்கள் விளாச, பாகிஸ்தான் பௌலிங்கில் முகமது ஹஃபீஸ் 6 ரன்களே கொடுத்து 1 விக்கெட் சாய்த்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com