டிஎன்பிஎல்: திருப்பூரை வென்றது மதுரை

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் சீசேம் மதுரை பாந்தா்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை வீழ்த்தியது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் சீசேம் மதுரை பாந்தா்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய மதுரை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய திரூப்பூா் 17.4 ஓவா்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற திருப்பூா் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பேட் செய்த மதுரையில் அதிகபட்சமாக கேப்டன் சதுா்வேத் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். திருப்பூா் தரப்பில் கருப்பசாமி 2 விக்கெட் சாய்த்தாா்.

திருப்பூா் அணியில் அதிகபட்சமாக ராஜ்குமாா் 42 ரன்கள் அடிக்க, மதுரை பௌலிங்கில் ரகுபதி, கௌதம், அவ்ஷிக் ஆகியோா் தலா 2 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com