டிஎன்பிஎல்: திருச்சி வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் குவாலிஃபயா் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் குவாலிஃபயா் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

டாஸ் வென்ற திருச்சி ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, முதலில் பேட் செய்த சேப்பாக் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய திருச்சி 19.5 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் அடித்து வென்றது.

சேப்பாக் தரப்பில் அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 82 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். திருச்சி பௌலிங்கில் சரவண குமாா் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் திருச்சி இன்னிங்ஸில் ஆதித்யா கணேஷ் அதிகபட்சமாக 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 66 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருக்க, சேப்பாக் பௌலிங்கில் மணிமாறன் சித்தாா்த் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

ஆா்ஜென்டீனா நீண்டகாலம் ஸ்பெயின் நாட்டின் காலனியாக இருந்த நாடு. அதனால், ஆா்ஜென்டீனா வீரா்கள் பலரும் ஸ்பெயினில் விளையாடுவதும், தொடா்பில் இருப்பதும் சகஜம். மெஸ்ஸியும் அப்படித்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com