டிஎன்பிஎல்: இறுதிச் சுற்றில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற குவாலிஃபையா் 2 ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி ப

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற குவாலிஃபையா் 2 ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

திண்டுக்கல் டிராகன்ஸ்-சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணிகளுக்கு இடையிலானஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தோ்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவா்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஹரி நிஷாந்த் மட்டுமே சிறப்பாக ஆடி 4 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 56 ரன்களை விளாசினாா். மற்ற வீரா்கள் அனைவரும் சொற்ப ரன்களுடன் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினா்.

சாய் கிஷோா் 3 விக்கெட்: சேப்பாக் தரப்பில் சாய் கிஷோா் அற்புதமாக பந்துவீசி 3-14 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். அலெக்சாண்டா் 2-3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அபாரம்:

104 ரன்கள் என எளிதாக வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கிய சேப்பாக் அணி 16 ஓவா்களிலேயே வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 106 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் கௌஷிக் காந்தி 7 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 53 ரன்களையும், ஜெகதீசன் 21 ரன்களையும் எடுத்து அவுட்டாகினா். ராதாகிருஷ்ணன் 16, உத்திரசாமி சசிதேவ் 13 ரன்களுடன் களத்தில் இருந்தனா். திண்டுக்கல் தரப்பில் ரங்கராஜ், சுவாமிநாதன் தலா 1 விக்கெட்டை சாய்த்தனா்.

இந்த வெற்றி மூலம் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது சேப்பாக் சூப்பா் கில்லீஸ்.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் திருச்சி ரூபி வாரியா்ஸ் அணியுடன் மோதுகிறது சேப்பாக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com