இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்த ஆர்சிபி அணி!

இங்கிலாந்தைச் சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜார்ஜ் கார்டனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தேர்வு செய்துள்ளது. 
ஆர்சிபி அணி (கோப்புப் படம்)
ஆர்சிபி அணி (கோப்புப் படம்)

இங்கிலாந்தைச் சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜார்ஜ் கார்டனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தேர்வு செய்துள்ளது. 

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜார்ஜ் கார்டனை ஆர்சிபி அணி தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து கவுண்டியில் சஸ்ஸெக்ஸ் அணிக்காக கார்டன் விளையாடி வருகிறார். ஆர்சிபி அணியில் இருந்த கேன் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ஜார்ஜ் கார்டன் தேர்வாகியுள்ளார். 24 வயது கார்டன் முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளார். 

செப்டம்பர் 20 அன்று கேகேஆர் அணிக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறது ஆர்சிபி அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com