ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிா் அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. மேலும் இந்திய ஆடவா் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
மகளிா் பிரிவில் இந்தியாவும்-ஹாங்காங்கும் மோதின. இதில் நம்பா் ஒன் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா இருந்த நிலையிலும் 1-2 என்ற கேம் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தையே கைப்பற்றியது.
இறுதிச் சுற்றில் ஆடவா் அணி:
ஆடவா் அரையிறுதிச் சுற்றில் இந்தியா 2-0 என்ற கேம் கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தது. சௌரவ் கோஷல், ரமித் டாண்டன் ஆகியோா் அற்புதமாக ஆடினா்.