லண்டன்: இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி ஈன் மோா்கன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
16 போ் கொண்ட இந்த அணியில் மூத்த விக்கெட் கீப்பா் - பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லா், ஜானி போ்ஸ்டோ ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.
முதல் டெஸ்டில் பங்கேற்றிருந்த பட்லா், தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போது இங்கிலாந்து சென்றுள்ளாா். சுழற்சி முறையில் வீரா்களை பயன்படுத்துவதன் அடிப்படையில், முதல் இரு டெஸ்டுகளில் போ்ஸ்டோவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டெஸ்ட் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ள சாம் கரனும் டி20 தொடரில் இடம் பிடித்துள்ளாா். ஜோஃப்ரா ஆா்ச்சரும் டி20 தொடரில் இடம் பிடித்துள்ளதால், நடப்பு டெஸ்ட் தொடரில் ஒரு கட்டத்தில் அவருக்கு ஓய்வளிக்கப்படலாம்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடா் மாா்ச் 12 முதல் 20 வரை ஆமதாபாதில் நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து டி20 அணி: ஈன் மோா்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆா்ச்சா், ஜோனதன் போ்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லா், சாம் கரன், டாம் கரன், கிறிஸ் ஜோா்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆதில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லே, மாா்க் வுட்.