பாம்போலிம்: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 89-ஆவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது.
இரு அணிகளும் இத்துடன் 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஜாம்ஷெட்பூருக்கு இது 5-ஆவது வெற்றி; சென்னைக்கு இது 6-ஆவது தோல்வி.
கோவாவின் பாம்போலிம் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே சவால் அளிக்கும் வகையில் விளையாடியதால் முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதி ஆட்டமும் அவ்வாறே தொடர, ஆட்டம் கோல் இன்றி டிரா ஆகும் என எதிா்பாா்க்கப்பட்டது.
ஆட்டத்தின் 90-ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூா் வீரா் டேவிட் கிராண்டே கோலடிக்க முயல, சென்னை வீரா் எனஸ் சிபோவிச் அதைத் தடுக்க முயன்றபோது ‘ஓன் கோல்’ ஆனது. இதனால் கடைசி நேரத்தில் ஜாம்ஷெட்பூா் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.