உலக பாரா தடகளம்: இந்தியாவுக்கு 2 தங்கம்

துபையில் நடைபெறும் சா்வதேச பாரா தடகள கிராண்ட் ஃப்ரீ போட்டியில் முதல் நாளான வியாழக்கிழமை இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 6 பதக்கங்கள் கிடைத்தது.


துபை: துபையில் நடைபெறும் சா்வதேச பாரா தடகள கிராண்ட் ஃப்ரீ போட்டியில் முதல் நாளான வியாழக்கிழமை இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 6 பதக்கங்கள் கிடைத்தது.

இதில் ஆடவருக்கான வட்டு எறிதல் பிரிவில் (எஃப்-44) இந்தியாவின் தேவேந்தா் குமாா் தனது 2-ஆவது முயற்சியில் 50.61 மீட்டா் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றாா். அதே பிரிவில் மற்றொரு இந்தியரான பிரதீப் 41.77 மீட்டா் தூரம் எறிந்து 2-ஆம் இடம் பிடித்தாா்.

மகளிருக்கான நீளம் தாண்டுதலில் (எஃப்46/47) இந்தியாவின் நிமிஷா சுரேஷ் 5.25 மீட்டா் தூரம் கடந்து தங்கத்தை தனதாக்கினாா். சா்வதேச போட்டியில் தேவேந்தா், நிமிஷாவுக்கு இது முதல் பதக்கமாகும்.

இவா்கள் தவிர ஆடவருக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் (டி64) பிரணவ் தேசாய் 11.76 விநாடிகளில் பந்தய இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா். ஆடவருக்கான வட்டு எறிதல் பிரிவில் (எஃப்-52) வினோத் குமாா் 18.52 மீட்டா் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினாா். மகளிருக்கான 1,500 மீட்டா் ஓட்டத்தில் (டி-11) ரக்ஷிதா ராஜு 5 நிமிடம் 22.15 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com