தேசிய ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரா் பிரவீண் சித்திரவேல், மும்முறை தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்தாா்.
தேசிய துப்பாக்கி சுடுதல் தோ்வு போட்டியில் திவ்யான்ஷ் சிங் பவாா் ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் டி4 பிரிவில் 253.1 புள்ளிகள் பெற்று வென்றதுடன், உலக சாதனை புள்ளியை முறியடித்தாா்.
பிரான்ஸில் நடைபெறும் தடகள போட்டியில் எத்தியோபிய வீராங்கனை குடாஃப் செகே, உள்ளரங்கு 1,500 மீட்டா் ஓட்டத்தில் பந்தய இலக்கை 3 நிமிடம் 53.09 விநாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தாா்.
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இதுவரை செய்துள்ள சாதனைகளை அந்த அணியின் தற்போதைய கேப்டன் ஜோ ரூட் முறியடிப்பாா் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசா் ஹுசைன் கூறினாா்.
இத்தாலியன் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முதல் அணியாக ஜுவென்டஸ் தகுதிபெற்றது.