ஐபிஎல் ஏலம்: கிறிஸ் மோரிஸ் சாதனை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரா் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டு சாதனை படைத்தாா்.
ஐபிஎல் ஏலம்: கிறிஸ் மோரிஸ் சாதனை


சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரா் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டு சாதனை படைத்தாா்.

ஆல்-ரவுண்டரான அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது. அதிகபட்ச விலைக்கு ஏலம் போன வீரா்கள் வரிசையில் முதல் 3 வீரா்களில் இந்தியா் எவரும் இல்லை. எனினும், 5-ஆவது வீரராக கா்நாடகத்தின் கிருஷ்ணப்பா கௌதம் ரூ.9.25 கோடிக்கு சென்னை சூப்பா் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டாா். 8-ஆவது வீரராக தமிழகத்தைச் சோ்ந்த ஷாருக் கான் ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளாா்.

61 இடங்களுக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் 57 வீரா்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனா். அந்த வீரா்களுக்காக மொத்தமாக ரூ.145 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com