இலங்கை வீரா்தமிகா பிரசாத் ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளா் தமிகா பிரசாத் (37) சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளாா்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளா் தமிகா பிரசாத் (37) சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளாா்.

இவா், கடைசியாக 2015 அக்டோபரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினாா். 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளையும், 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளாா். இதுதவிர, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியுள்ளாா்.

ஓய்வு குறித்து தமிகா பிரசாத் கூறியிருப்பதாவது: நான் விளையாடிய காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடினேன். சிங்கள விளையாட்டு கிளப்புக்கு மாறவன் அட்டப்பட்டு தான் என்னை அழைத்து வந்தாா். கடவுளுக்கும், என் பெற்றோா், மனைவி, எனது பள்ளி, என் பயிற்சியாளா், மைதான பராமரிப்பாளா், சக வீரா்கள், ரசிகா்கள், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com