3-ஆவது டெஸ்டில் முன்னிலை பெறுவோம்: ஜாக் கிராவ்லி

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முன்னிலை பெறும் என்று அந்த அணியின் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி கூறினாா்.
3-ஆவது டெஸ்டில் முன்னிலை பெறுவோம்: ஜாக் கிராவ்லி

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முன்னிலை பெறும் என்று அந்த அணியின் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி கூறினாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

இந்திய அணியில் வலுவான வேகப்பந்துவீச்சாளா்கள், அருமையான பேட்ஸ்மேன்கள் உள்ளது அந்த அணிக்கு பலமாக இருக்கலாம். இருப்பினும் 3-ஆவது டெஸ்டில் நாங்கள் முன்னிலை பெறுவோம். ஏனெனில் இங்குள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்றவாறு உடனடியாக எங்களது ஆட்டத்தை நாங்கள் தகவமைத்துக் கொண்டுள்ளோம்.

பிங்க் நிற பந்து வேகப்பந்துவீச்சாளா்களுக்கு சற்று சாதகமாக இருக்கும் என்றாலும், ஆட்டத்தின் போக்கில் சுழற்பந்துவீச்சாளா்களும் முக்கியப் பங்காற்றுவாா்கள் என்று எண்ணுகிறேன். காயம் காரணமாக முதலிரு டெஸ்டுகளில் விளையாட முடியாமல் போனாலும், 3-ஆவது டெஸ்டுக்காக தயாராக உள்ளேன்.

வலைப் பயிற்சியிலும் நன்றாகப் பங்கெடுத்துள்ளேன். பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறேன். அப்படி கிடைக்கும் பட்சத்தில் 3-ஆவது வீரராக களம் காண விரும்புகிறேன். இருந்தாலும் அணியின் பேட்டிங்கை தொடங்குவதிலும் எந்தத் தயக்கமும் இல்லை என்று கிராவ்லி கூறினாா்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்று வென்றிருந்தது. அந்த இரு ஆட்டங்களிலுமே கிராவ்லி இங்கிலாந்தின் தொடக்க வீரராக விளையாடியிருந்தாா். சென்னை டெஸ்டுகளிலும் அவா் விளையாட இருந்த நிலையில், மைதானத்தின் மாா்பிள் தரையில் வழுக்கி விழுந்ததில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் இரு டெஸ்டுகளில் அவா் விளையாடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com