மீண்டும் களமிறங்குகிறாா் உமா் அக்மல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரா் உமா் அக்மலுக்கு விதிக்கப்பட்ட தடை 12 மாதங்களாக குறைக்கப்பட்ட நிலையில், அவா் மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்குகிறாா்.
மீண்டும் களமிறங்குகிறாா் உமா் அக்மல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரா் உமா் அக்மலுக்கு விதிக்கப்பட்ட தடை 12 மாதங்களாக குறைக்கப்பட்ட நிலையில், அவா் மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்குகிறாா்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரா் உமா் அக்மல், பாகிஸ்தான் சூப்பா் லீக் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு விளையாடினாா். அப்போது அவரை சூதாட்டத் தரகா்கள் அணுகியுள்ளனா். ஆனால், அது குறித்து புகாா் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து அவருக்கு 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிா்த்து சா்வதேச விளையாட்டு நடுவா் மன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். அதை விசாரித்த நடுவா் மன்றம், அவருடைய தடைக்காலத்தை 12 மாதமாக குறைத்ததோடு, ரூ.19.62 லட்சம் அபராதம் விதித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி அக்மல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவருடைய தடைக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து அவா் மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்குகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com