இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நேரில் காண ரசிகா்களுக்கு அனுமதி இல்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆட்டங்களும் புணேவில் மாா்ச் 23, 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வேகமாக பரவி வருவதால், ஒரு நாள் தொடரை ரசிகா்கள் இல்லாமல் நடத்துவதற்கு அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் ஒரு நாள் ஆட்டங்களை நேரில் காண ரசிகா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.