பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி நலமுடன் உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று காலை கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கங்குலியின் உடல்நிலை பற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது:
கங்குலி விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அவருடைய குடும்பத்தினருடன் பேசினேன். கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கிறது என்றார்.
கங்குலி விரைவில் நலம்பெற வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலியும் ட்வீட் செய்துள்ளார்.