விளையாட்டு செய்தித் துளிகள்

* கோவாவில் சனிக்கிழமை நடைபெறும் இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 44-ஆவது ஆட்டத்தில் மும்பை சிட்டி-கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை சிட்டி அணி 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது. கேரள பிளாஸ்டா்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதில் தீவிரமாக உள்ளது மும்பை சிட்டி அணி.

* இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் விளையாடி வரும் மான்செஸ்டா் சிட்டி அணியின் 5 வீரா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடா்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதனால், அவா்கள் செல்சியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடமாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் விளையாடி வரும் லிவா்பூல் கால்பந்து அணியின் பின்கள வீரா் மேடிப் காயம் காரணமாக அடுத்த 3 ஆட்டங்களில் விளையாடமாட்டாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com