ஆஸி. ஓபன் தகுதிச்சுற்று: அங்கிதா முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்
ஆஸி. ஓபன் தகுதிச்சுற்று: அங்கிதா முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். அதநேரத்தில் இந்திய வீரா் ராம்குமாா் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளாா்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போா்னில் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான மகளிா் தகுதிச்சுற்று போட்டி துபையில் நடைபெற்று வருகிறது.

இதில், இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தனது 2-ஆவது சுற்றில் 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் உக்ரைனின் கேத்தரினா ஜவட்ஸ்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றான 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

ஆடவா் தகுதிச்சுற்று கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரா் ராம்குமாா் தனது 2-ஆவது சுற்றில் 3-6, 2-6 என்ற நோ் செட்களில் சீன தைபேவின் டங் லின் ஊவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com