ஆஸி. ஓபன் தகுதிச்சுற்று: அங்கிதா தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வி கண்டார்.


மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வி கண்டார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான மகளிர் தகுதிச்சுற்று போட்டி, துபையில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 2-6, 6-3, 1-6 என்ற செட் கணக்கில் செர்பிய வீராங்கனை ஓல்கா டேனிலோவிச்சிடம் தோல்வி கண்டார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் அங்கிதா.
கிராண்ஸ்ட்ஸ்லாம் போட்டியின் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெறுவதற்காக இதுவரை 6 முறை முயற்சித்தபோதும், அவையனைத்தும் அங்கிதா ரெய்னாவுக்கு தோல்வியிலேயே முடிந்துள்ளது.
இந்தியாவில் இருந்து சுமித் நாகல் மட்டுமே ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கிறார். அவருக்கு ஆடவர் ஒற்றையர் பிரிவில் வைல்ட்கார்டு (நேரடித்தகுதி) வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com