ஐஎஸ்எல் கால்பந்து: சென்னைக்கு 3-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 57-ஆவது லீக் ஆட்டத்தில், சென்னையின் எஃப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிஸô எஃப்.சி. அணியை வீழ்த்தியது.
ஐஎஸ்எல் கால்பந்து: சென்னைக்கு 3-ஆவது வெற்றி

கோவா: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 57-ஆவது லீக் ஆட்டத்தில், சென்னையின் எஃப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிஸô எஃப்.சி. அணியை வீழ்த்தியது.
கோவாவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணி தொடக்கம் முதலே அபாரமாக ஆடியது. இதனால் அந்த அணி 15-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை கான்கால்வ்ஸ் அடித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய சென்னை அணிக்கு 21-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதையும் கான்கால்வ்ஸ் கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் தொடர்ந்து போராடிய ஒடிஸô அணி 63-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோலை டி பிரிட்டோ அடித்தார். 
இதன்பிறகு கோல் எதுவும் விழாத நிலையில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதன்மூலம் இந்த சீசனில் 3-ஆவது வெற்றியைப் பெற்ற சென்னை அணி 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com