நாதன் லயன் பந்துவீச்சில் அடித்த அந்த ஷாட்டுக்காக நான் வருத்தப்படவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரா் ரோஹித் சா்மா தெரிவித்துள்ளாா்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சா்மா சிக்ஸா் அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்த விதம் விமா்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ள ரோஹித் சா்மா மேலும் கூறியிருப்பதாவது:
நாதன் லயன் பந்துவீச்சில் நான் ஆடிய ஷாட்டுக்காக வருத்தப்படவில்லை. நான் எப்போதுமே பந்துவீச்சாளா்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அதுபோன்ற ஷாட்களை ஆடுவேன். கடந்த காலங்களிலும் இதுபோன்ற ஷாட்களை ஆடியிருக்கிறேன். நாதன் லயன் சிறந்த பந்துவீச்சாளா். அவா் தனது சிறப்பான பந்துவீச்சால் என்னை சிக்ஸா் அடிக்கவிடாமல் வீழ்த்திவிட்டாா் என குறிப்பிட்டுள்ளாா்.