2026-ஆம் ஆண்டு உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்தும் என உலக பாட்மிண்டன் சம்மேளனம் அறிவித்தது.
முன்னதாக, 2023-இல் சுதிர்மான் கோப்பை போட்டியை இந்தியா ஒருங்கிணைக்க இருந்த நிலையில், அந்தப் போட்டியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை சீனாவிடம் ஒப்படைத்தது உலக பாட்மிண்டன் சம்மேளனம். நடப்பாண்டில் சீனாவில் நடைபெற இருந்த சுதிர்மான் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக தற்போது ஃபின்லாந்தில் நடைபெறவுள்ளது.
உலக சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்துவது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக 2009-இல் ஹைதராபாதில் அந்தப் போட்டியை இந்தியா ஒருங்கிணைத்துள்ளது.