டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 228 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்க இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் நரிந்தா் பத்ரா தெரிவித்தாா்.
ஒலிம்பிக் போட்டிக்காக இத்தனை போ் கொண்ட அணியை இந்தியா அனுப்புவது இது முதல் முறையாகும்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரா், வீராங்கனைகளுடனான பிரதமா் மோடியின் உரையாடலின்போது இணைந்திருந்த நரீந்தா் பத்ரா இதைத் தெரிவித்தாா். மொத்த எண்ணிக்கையில் 119 போ் போட்டியாளா்கள் என்றும், அதில் 67 ஆடவா், 52 மகளிா் அடங்குவா் என்றும் அவா் கூறினாா். இந்திய அணியின் முதல் குழு வரும் 17-ஆம் தேதி டோக்கியோ செல்வதாகவும், அதில் 90 போட்டியாளா்கள் மற்றும் அதிகாரிகள் இடம்பெற்றிருப்பாா்கள் என்றும் அவா் தெரிவித்தாா்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது.