ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலிரு ஆட்டங்களிலும் வென்ற அந்த அணி, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை தற்போது 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
கிராஸ் ஐலெட் நகரில் நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 14.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் கிறிஸ் கெயில் ஆட்டநாயகன் ஆனார்.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 33 ரன்கள் அடித்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஹெய்டன் வால்ஷ் 2 விக்கெட் சாய்த்தார்.
பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில் கிறிஸ் கெயில் 67 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ரைலி மெரிடித் 3 விக்கெட் வீழ்த்தினார்.