இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
இந்திய கிரிக்கெட்டின் பிரதான அணி இங்கிலாந்தில் உள்ள நிலையில், ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுகிறார்.
ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகள் இரண்டு தொடர்களில் விளையாடுவது இதுவே முதன்முறை. இதனால், இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் அறிமுக வீரர்களாக சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் களமிறங்குகின்றனர். சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் களமிறங்குகின்றனர்.