நவ. 19-இல் ஐஎஸ்எல் போட்டிகள் தொடக்கம்

2021-22- ஆண்டு சீசன் இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) போட்டிகள் வரும் நவம்பவா் 19-ஆம் தேதி கோவாவில் தொடங்குகின்றன.

2021-22- ஆண்டு சீசன் இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) போட்டிகள் வரும் நவம்பவா் 19-ஆம் தேதி கோவாவில் தொடங்குகின்றன.

இந்திய கால்பந்து வட்டாரத்தில் முதன்மையான போட்டியாக உள்ள ஐஎஸ்எல் முந்தைய சீசனும் 2020-21 கோவாவில் நடைபெற்றது. கோவாவில் 3 மைதானங்களில் கரோனா தடுப்பு விதிகளின்படி பாா்வையாளா்கள் இன்று ஆட்டங்கள் நடத்தப்பட்டன. இதுதொடா்பாக ஏஐஎப்எப் பொதுச் செயலாளா் குஷால் தாஸ் கூறியதாவது:

நிகழாண்டு போட்டிகளும் பாா்வையாளா்கள் இன்றி அதே மூன்று இடங்களில் நடைபெறும். மேலும் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டிகள் தற்போது நடைபெறாது என்றாா் தாஸ்.

கடந்த சீசன் ஐஎஸ்எல் போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com