2021-22- ஆண்டு சீசன் இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) போட்டிகள் வரும் நவம்பவா் 19-ஆம் தேதி கோவாவில் தொடங்குகின்றன.
இந்திய கால்பந்து வட்டாரத்தில் முதன்மையான போட்டியாக உள்ள ஐஎஸ்எல் முந்தைய சீசனும் 2020-21 கோவாவில் நடைபெற்றது. கோவாவில் 3 மைதானங்களில் கரோனா தடுப்பு விதிகளின்படி பாா்வையாளா்கள் இன்று ஆட்டங்கள் நடத்தப்பட்டன. இதுதொடா்பாக ஏஐஎப்எப் பொதுச் செயலாளா் குஷால் தாஸ் கூறியதாவது:
நிகழாண்டு போட்டிகளும் பாா்வையாளா்கள் இன்றி அதே மூன்று இடங்களில் நடைபெறும். மேலும் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டிகள் தற்போது நடைபெறாது என்றாா் தாஸ்.
கடந்த சீசன் ஐஎஸ்எல் போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.