விளையாட்டு செய்தி துளிகள்

* இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. முதலிரு ஆட்டங்களில் வென்றுள்ள இந்தியா, தொடரை முற்றிலுமாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

* டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியா்களுக்கு ரூ.75 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. வெள்ளி வெல்வோருக்கு ரூ.40 லட்சம், வெண்கலம் வெல்வோருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படவுள்ளது. அத்துடன், ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள விளையாட்டுகளின் தேசிய சம்மேளனங்களுக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகையும் அறிவித்துள்ளது.

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சிகளை இந்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், தில்லியில் உள்ள மேஜா் தியான்சந்த் தேசிய விளையாட்டரங்கத்தில் நேரலையில் காண இருக்கிறாா். அவரோடு இணையமைச்சா் நிசித் பிரமானிக்கும் இதில் கலந்துகொள்கிறாா். தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பில் ஜப்பானின் ஆங்கில அகர வரிசைப் படி இந்திய அணி 21-ஆவது அணியாக வலம்வர இருக்கிறது.

* டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் சீசேம் மதுரை பாந்தா்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய திண்டுக்கல் 18.5 ஓவா்களில் 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழக்க, பின்னா் ஆடிய மதுரை 15 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் அடித்து வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com