உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வர்ணனையாளராகப் பணியாற்றவுள்ள தினேஷ் கார்த்திக்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வர்ணனையாளராகப் பணியாற்றவுள்ள தினேஷ் கார்த்திக்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வர்ணனையாளராகப் பணியாற்றவுள்ள தினேஷ் கார்த்திக்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வர்ணனையாளராகப் பணியாற்றவுள்ளார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். 

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது. இந்தச் சுற்றுப்பயணத்துக்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் வர்ணனையாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வாகியுள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு விரைவில் செல்லவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com