டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் செளதாம்ப்டனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது. இந்தச் சுற்றுப்பயணத்துக்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.
இந்நிலையில் செளதாம்ப்டன் சென்ற இந்திய அணியினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் இந்திய அணியினர் இங்கிலாந்து சென்றது பற்றிய விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.