உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டநேர விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்காக இந்திய அணி சௌதாம்ப்டனில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக இந்திய அணியே விராட் கோலி தலைமையிலும் கேஎல் ராகுல் தலைமையிலும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதன் 2-ம் நாள் ஆட்டத்தில் ஷுப்மன் கில் சிறப்பான தொடக்கம் தந்து 135 பந்துகளில் 85 ரன் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து, ரிஷப் பந்த் அதிரடி காட்டி 94 பந்துகளில் 121 ரன்கள் சேர்த்தார். பந்துவீச்சில் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.