உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆவது கட்டப் போட்டியில் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆவது கட்டப் போட்டியில் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர தம்பதியான அதானு தாஸ்-தீபிகா குமாரி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதி ஆகியுள்ளது.

ஸ்பெயினின் டேனியல் கேஸ்ட்ரோ-இனேஸ் வெலாஸ்கோ இணைக்கு எதிரான அரையிறுதிச் சுற்றில் தொடக்கம் முதலே கடும் சவாலை சந்தித்து அதானு-தீபிகா இணை. 3-ஆவது செட்டில் 3-3 என சமநிலை ஏற்பட்டது. நான்காவது செட்டில் சிறப்பாக செயல்பட்டு 5-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது இந்திய இணை.

இறுதிச் சுற்றில் நெதா்லாந்தை எதிா்கொள்கிறது இந்தியா. ஏற்கெனவே மகளிா் ஒற்றையா் பிரிவில் தீபிகா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா். வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை பிரிவில் அதானு-தீபிகா அணி பதக்கம் வெல்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com